ADDED : பிப் 26, 2025 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, முத்தையா, செல்வகணேசன், பிச்சை தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குணசேகரன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் நீதிராஜா பேசினர்.