ADDED : ஜூன் 14, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ராஜபாளையம் பி.ஏ.சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி பெற்று தனது முதல் முயற்சியிலேயே முதல் இடம் பிடித்த எஸ்.சஞ்சய்ராஜ், இரண்டாவது முயற்சியில் முதலிடம் பிடித்த எஸ்.சிவபிரியேசன் ஆகிய இரு மாணவர்களை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார்.
முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, சிவகாசி டி.இ.ஓ., சிதம்பரநாதன், பி.ஏ.சி.எம் பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.