ADDED : ஆக 22, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி சாத்தூரில் நடந்தது இதில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர்லயன்ஸ் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று 12,14,17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் உறுப்பினர்கள், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.