ADDED : மார் 07, 2025 07:20 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு அதிகமாக வழங்கிய டி.எஸ்.டி.ஒ., எண்ணிக்கை குறைத்தல் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் ஜெயசிம்மன் தலைமையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது.
இவர்களுக்கு ஆதரவான பிரசாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் அலுவலகங்களில் பணியாளர்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
