sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்

/

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பட்டாசு சங்கங்களுக்கு கடிதம்


ADDED : மே 30, 2024 02:59 AM

Google News

ADDED : மே 30, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலைகளில் நடத்தப்படும் ஆய்வை கண்டித்து ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாப்மா சங்கத்தினர், சிவகாசியில் உள்ள மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.

சிவகாசி பகுதியில் சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகளை நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24 முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மே 27 ல் இச்சங்கத்தினர் கலெக்டரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. இன்று வரை 7 நாட்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் இதுவரையிலும் ரூ. 14 கோடி வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.

டாப்மா சங்கம் சார்பில் சிவகாசியில் உள்ள மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கங்களான டான்பாமா, டிப்மா, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் சங்கத்தின் சார்பாக பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறோம். தற்போதும் பட்டாசு ஆலைகளை மூடியும் நமது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். மேலும் இந்தப் போராட்டத்தினை வலுப்பெறச் செய்ய தாங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us