ADDED : மார் 07, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் (மெகா எம்.எஸ்.எம்.இ., அவுட்ரீச் திட்ட முகாம்) குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடந்தது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் மேனேஜர் கனிகா பாஸ்ரிச்சா, திருநெல்வேலி பிராந்திய அலுவலக முதன்மை மேலாளர் முந்தலா தலைமை வகித்தனர். விருதுநகர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சரவண கணேஷ் கலந்து கொண்டார்.
மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். ரூ. 150 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.