ADDED : மார் 24, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னகடை தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 42, லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் 2:00 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, திருமுக்குளத்தில் குளிக்க வந்துள்ளார்.
அப்போது நிலை தடுமாறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

