/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமம் தற்காலிக ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்
/
உரிமம் தற்காலிக ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்
உரிமம் தற்காலிக ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்
உரிமம் தற்காலிக ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு சீல் வைத்த அதிகாரிகள்
ADDED : மே 16, 2024 02:38 AM

சிவகாசி:சிவகாசி அருகே மாரனேரியில் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதால் ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில், பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை விதி மீறி இயங்கியதால், 2024 மார்ச் 1ல் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் வடிவேல், அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்தனர். ஆய்வில் 50 தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக, பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.