ADDED : ஆக 21, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் 62. இவர் நேற்று மாலை 4:45 மணிக்கு தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

