ADDED : மே 30, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் ராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதன்படி ராமசாமியாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், தம்பிபட்டியில் ஊராட்சி சேவை மையத்திலும், கான்சாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், வத்ராயிருப்பில் மேலப்பாளையம் இ சேவை மையம் அருகில் உள்ள பேரூராட்சி களத்திலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு சன்ன ரகம் ஏ கிரேட் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்து 310 க்கும், பொது ரகம் சி கிரேடு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 265 க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மார்க்கெட்டிங் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.