/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன காப்பகத்தில் ரூ.5க்கு பதில் ரூ.15 வசூல் சிவகாசி மாநகராட்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
வாகன காப்பகத்தில் ரூ.5க்கு பதில் ரூ.15 வசூல் சிவகாசி மாநகராட்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வாகன காப்பகத்தில் ரூ.5க்கு பதில் ரூ.15 வசூல் சிவகாசி மாநகராட்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வாகன காப்பகத்தில் ரூ.5க்கு பதில் ரூ.15 வசூல் சிவகாசி மாநகராட்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 21, 2024 03:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் மாநகராட்சி வாகன காப்பகத்தில் டூவீலர் உரிமையாளரிடம் ரூ.5 க்கு பதில் ரூ. 15 பார்க்கிங் கட்டணம் வசூலித்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு குத்தகைதாரரும், சிவகாசி மாநகராட்சி ஆணையாளரும் சேர்ந்தோ அல்லது தனித்தோ ரூ 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருத்தங்கல் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி. இவர் ஜன. 31ல் கோவில்பட்டி செல்வதற்காக தனது டூவீலரை சிவகாசி பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தும்போது, அங்கிருந்த ஊழியர் ரூ.5க்கு பதில் ரூ.15 பார்க்கிங் கட்டணமாக வசூலித்துள்ளார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சுப்பிரமணியத்தை ஊழியர் அவமரியாதையாக பேசி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம், வாகன காப்பக குத்தகை தாரர் முத்துக்கனி, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இழப்பீடு தர கோரி விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.
இதில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட வாகன கட்டணம் ரூ.10ஐ திரும்ப வழங்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 10 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரத்தை, வாகன காப்பக குத்தகைதாரர் முத்துக்கனி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.