sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தல் அதிகரிப்பு பெற்றோர் அச்சம்

/

வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தல் அதிகரிப்பு பெற்றோர் அச்சம்

வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தல் அதிகரிப்பு பெற்றோர் அச்சம்

வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தல் அதிகரிப்பு பெற்றோர் அச்சம்


ADDED : ஆக 23, 2024 03:39 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்துள்ளது. இவர்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைப்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் நாளுக்கு கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்தவர்கள் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைக்கின்றனர்.

இங்கிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு ரயிலில் செல்பவர்கள் புரோக்கர்கள் உதவியுடன் கஞ்சா பார்சல்களை வாங்குகின்றனர். இந்த கடத்தலுக்காக ரயில் பயணி போல நடிப்பதற்கு மது போதைக்கு அடிமையான இளைஞர்களை பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களின் உதவியோடு ரயில், பஸ்சில் பயணிகளை போல கஞ்சாவை கடத்தல் மூலம் மாவட்டத்திற்கு கொண்டு வருகின்றனர்.

இந்த கஞ்சா பார்சல்களை 5 கிராம் முதல் 10 கிராம் வரையிலான பொட்டலங்களாக தயார் செய்து தங்கள் பகுதியில் விற்பனை செய்கின்றனர். இதை வாங்கி பயன்படுத்தி அடிமையான இளைஞர்கள் பொது இடங்களில் முர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். இவர்களை தட்டிக்கேட்பவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுப்பதால் மக்கள் அஞ்சுகின்றனர்.

இது போன்ற கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும் ரயிலில் கடத்தி வரப்படும் கஞ்சா, கடத்தலில் ஈடுபடுபவர்களை தனிப்படை போலீசார் கண்டறிந்து கைது செய்கின்றனர். ஆனால் அதிகரிக்கும் கஞ்சா கும்பலை முழுவதும் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

எனவே கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் அனுமதிப்பதோடு, , கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us