/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பூங்காக்கள்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பூங்காக்கள்
ADDED : ஜூன் 26, 2024 07:37 AM
சாத்துார் : வேலைகள் முடிந்து திறக்கப்படாத பூங்காக்கள், சுகாதார வளாகங்களை திறக்க சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ஜெகதீஷ்வரி, இன்ஜினியர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம் பின்வருமாறு:
கணேஷ் குமார் (ம.தி.மு.க.): 3வது வார்டில் 2 பூங்கா, பஸ் ஸ்டாண்டில் பொது சுகாதார வளாகம் வேலை முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
சுப்புலட்சுமி (ம.தி.மு.க): 1வது வார்டில் ரோட்டில் மாடுகள் உலா வருகின்றன. பூங்காவில் படுத்துக் கொள்கின்றன. பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.
சங்கர் (தி.மு.க): தெற்கு ரத வீதியில் சமுதாயகூடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
மரியசிரஞ்சீவி (தி.மு.க): திறந்தவெளியில் உள்ள பொதுகிணறை மூடவேண்டும். சாக்கடை தள்ள ஆட்கள் வரவில்லை.
பொன்ராஜ் (தி.மு.க): மேலக்காந்திர நகர் அங்கன்வாடி பள்ளிக்கு குடிநீர் குழாய் தேவை.
இன்ஜினியர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.