sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

/

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் உணவகங்கள் அமைக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 02, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு பசித்தால் உண்பதற்கு கூட வளாகத்தில் நல்ல உணவகம் இல்லை. இதனால் பசியுடன் பயணிக்க வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உணவகங்கள் அமைக்க கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகரில் அதிகரித்த மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தி மக்கள் சிரமமின்றி பயணிக்க 1992ல் புது பஸ் ஸ்டாண்ட் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு ஆக. 21ல் இருந்து முழு மறுபயன்பாட்டிற்கு வந்தது.

இங்கிருந்து அரசு விரைவு பஸ்கள், சிவகாசி, கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும் அரசு பை பாஸ் ரைடர்கள், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட துாரப்பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பயணிகளின் கூட்டம் எப்போதும் உள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகளுக்கு பசித்தால் உண்பதற்கு கூட நல்ல உணவகங்கள் இல்லை. வெளியூர் செல்லும் பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது வெளியே சென்று உணவு உட்கொண்டு வரவேண்டியுள்ளது.

வெளிப்பகுதிகளில் உள்ள கடைகள் எப்போதும் திறந்திருப்பதில்லை. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உணவகங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us