ADDED : ஆக 06, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி கட்டணங்கள் வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவி தொகைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. பிற்படுத்தப்டோர் துறை சார்பில் 5 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள், 9 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.2024--25ம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று முதலாமாண்டு கல்விக்கட்டணம் 7 மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அறக்கட்டளை மூலம், ரூ.75,800 கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.