நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியதாவது: முகமது பாரித் என்பவர் அலைபேசி மூலம் மாநில உணவு பாதுகாப்பு துறைக்கு ஒரு புகார் பதிவிட்டிருந்தார். இதில் ஸ்ரீவில்லிபுத்ததுாரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தான் வாங்கிய சிக்கனில் கண்ணாடி துகள்கள் கிடந்ததாக புகார் தெரிவித்த நிலையில், நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.
கெட்டுப் போன சிக்கன், அழுகிய முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, என்றார்.

