நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்தவர் விஜயபாண்டி,29, இவர் அழகாபுரி அருகே ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு ஓட்டலில் இருந்து அழகாபுரி நோக்கி நடந்து செல்லும் போது, ஒரு டூவீலரில் வந்த 3பேர் அவரை வழிமறித்து மதுரை செல்ல வழி கேட்பது போல் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி 2 அலைபேசிகளை பறித்து சென்றுள்ளனர்.
நத்தம்பட்டி போலீசார் கூமாபட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான்,19 ஸ்ரீவில்லிபுத்தூர் மாதவன்,19, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 அலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

