டூ வீலர் மாயம்
சிவகாசி: திருத்தங்கல் - விருதுநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் 34. ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர் தனது டூ வீலரை வீட்டின் முன்பு இரவு நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் பார்க்கையில் டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.-----
சிறுமி திருமணம்
வாலிபர் மீது வழக்கு
சிவகாசி: பழைய வெள்ளையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 20. இவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றாக வேலை பார்த்த போது காதலித்து வந்தனர். இந்நிலையில் பாலமுருகன், 17 வயது சிறுமியை திருத்தங்கலில் திருமணம் செய்து கொண்டார்.சிவகாசி சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி புகாரில் திருத்தங்கல் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.-----
பெண் காயம்
சிவகாசி: சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 45. இவர் சாத்துார் ரோட்டில் நடந்து சென்ற போது துாத்துக்குடியைச் சேர்ந்த மணி ஓட்டி வந்த லோடுவேன் மோதியதில் காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் மாயம்
விருதுநகர்: காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவா 23. இவரும் மனைவி சித்ராவும் காதல் திருமணம் செய்து இரு ஆண் குழந்தைகள் உள்ளது. ஏப். 26 மதியம் 2:00 மணிக்கு விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் மனைவி சித்ராவை வீட்டிற்கு செல் பின்னே வருகிறேன் என கூறி விட்டு சென்றவர் வீடு வரவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு
விருதுநகர்: மூளிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பவானி 26. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்குமாரும் பழகி வந்ததை கணவர் தங்கபாண்டி கண்டித்ததால் பவானி பழகுவதை நிறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த முனீஸ்குமார், நண்பர்கள் செபஸ்தியன், கமலக்கண்ணனுடன் சேர்ந்து தங்கப்பாண்டியை தாக்கினார். இதை தட்டிகேட்ட பவானியை ராமலட்சுமி, சகாயம் தாக்கினர். இதில் காயமடைந்த தங்கபாண்டி, மனைவி பவானி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆமத்துார் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.
முதியவர் பலி
சிவகாசி: செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் 65. இரு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலை அலுவலக அறை அருகே இறந்து கிடந்தார். அருகிலேயே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியான நிலையில் கிடந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.