பட்டாசு ஆலை விதிமீறல்
விருதுநகர்: ஆமத்துார் அருகே மருதநத்தம் தி ஆப்பிள்பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தார். ஆலை உரிமம் முடிவடைந்து உரிமம் புதுப்பிக்கப்படாமல் 7 தொழிலாளர்களுடன் இயங்கியது தெரிந்தது. உரிமையாளர் செந்தியப்பன் மகன் சீனிவாசன் மீது ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
வைக்கோல் படப்பில் தீ
நரிக்குடி: நரிக்குடி மிதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி 60. ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். மாடுகளுக்கு தீவனமாக வைக்கோல் வாங்கி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இரு இடங்களில் படப்புகளாக போட்டு வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை வைக்கோல் படத்தில் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. திருச்சுழி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம் பெண் மாயம்
சாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் செய்யதலி பாத்திமா, 46. இவர் மகள் லாஹிலா, 19. மே 8 வீட்டில் இருந்தவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
சாத்துார்: சாத்துார் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் நாதன், 69. வீட்டில் தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது வீட்டின் குளியல் அறையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி முதியவர் பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 82, இவர் நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு ரோட்டில் இருந்து கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் கார் டிரைவர் கபாலீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நகை தொழிலாளி தற்கொலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காசு கடை பஜார் பொன்னையா தெருவை சேர்ந்தவர் சங்கர், 37, இவர் நகைகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். பெற்றோர் இல்லாததால், இவருடைய தம்பி உதயகுமார்,29, இவருடன் இருந்து வந்தார். திருமணமாக வருத்தத்தில் இருந்தார். நேற்று முன்தினம்உதயகுமார் மதுவில் எலி பேஸ்டை கலந்து குடித்தார்.சிகிச்சை முடிந்து வீடு விரும்பிய உதயகுமாருக்கு இரவில் தலை சுற்றியதால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெயின்டர் பலி
விருதுநகர்: துாத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் 40. மத்தியசேனையில் தனியார்பள்ளியில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது கோக்காலியில் இருந்து தவறி விழுந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, 35, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றபோது, மழை பெய்து மின்தடை ஏற்பட்டு இருட்டாக இருந்த நிலையில் வாறுகாலில் தவறி விழுந்து பலியானார். கூமாபட்டி போலீசார் விசாரித்தனர்.