sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : மார் 02, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்கொலை

சாத்துார்: சாத்துார் நல்லமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுப்புத்தாய், 70. நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். மனவிரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ

சாத்துார்: சாத்துார் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் பால்பாண்டி, 30.சிவகாசியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார். இருவர் வீட்டிலும் பெரியவர்கள் இல்லாத நிலையில் இருவரும் கொல்லப்பட்டி வாடகை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார். சிகிச்சைக்கு சென்ற போது அவருக்கு வயது 16 என தெரியவந்தது.மகளிர் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் புகார்படி சாத்துார் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மாணவி மாயம்

சாத்துார்: சாத்துார் நாருகாபுரத்தை சேர்ந்தவர் பரிமளா காந்தி இவரது 15 வயது மகள் சாத்துார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பிப். 27 இரவு வீட்டில் இருந்த மாணவி மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us