
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் உள்ள உச்சினி மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். விரதம் இருந்து அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.