/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
/
சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
ADDED : மே 08, 2024 06:30 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் ஏப்ரல் 26ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சந்தன மாரியம்மன் வீதியுலா நடந்தது.
12ம் நாள் திருவிழாவான நேற்று மதியம் 3:45 மணிக்குமேல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து சந்தன மாரியம்மனை தரிசித்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

