நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை ஆராய்ச்சி துறையில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள்சசி ஆனந்த், அர்ஜுன் கலுசலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் 2022 ஜனவரிமுதல் டிசம்பர் வரை ஆராய்ச்சி வெளியீடுகள், காப்புரிமைகள் போன்ற பணிகளில் ஈடுபட்ட 114 பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பேசினர் ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன் வரவேற்றார். பேராசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

