ADDED : மே 11, 2024 11:09 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் சார்பில்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, ரயில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ரயில்வே எஸ்.ஐ. மாரியப்பன் தலைமை வகித்தார் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருப்பதி வேர்ல்டு விஷன் மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன், ரயில்வே அலுவலர்கள் ராஜு, நாகராஜ் ஊர்வலத்தை ஸ்டேஷன் முன்பிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தனார்.
ஊர்வலத்தில் ரயில்வே எஸ்.ஐ.க்கள் ஸ்ரீராமுலு, சமாதானம், ரயில்வே போலீசார், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், நேதாஜி சிலம்பம் அகடமி மாணவர்கள் பங்கேற்றனர்.
