ADDED : ஆக 09, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனால் மாலை 4:00 மணிக்கு கருமேக கூட்டங்கள் உருவானது. காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் மாலை 6:00 மணிக்கு துவங்கி சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் மேகக்கூட்டம் மட்டுமே காணப்பட்டது.
விருதுநகர், அருப்புக்கோட்டை, அதை சுற்றிய பகுதிகளில் மாலை 6:15 மணிக்கு துவங்கி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விருதுநகர், அருப்புக்கோட்டையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி வாகனங்களில் செல்ல முடியாமல் திண்டாடினர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.