/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருக்களில் ரோடு சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
/
தெருக்களில் ரோடு சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஆக 24, 2024 03:27 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி பசும்பொன் நகரில் ரோடு சேதத்தால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி பசும்பொன் நகரில் 4க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் இரு தெருக்களில் மட்டும் ரோடு முழுமையாக போடப்பட்டுள்ளது.
மற்ற தெருக்களில் மண் ரோடு மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தெரு முழுவதுமே சேறும் சகதியும் ஆக மாறி விடுகின்றது.
இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. தப்பித்தவறி வந்தாலும் வாகனங்கள் சேற்றில் பதிந்து விடுகின்றது.
இதனால் மழை பெய்தால் வாகனங்களை மெயின் ரோட்டிலேயே நிறுத்தி நடந்து செல்ல நேரிடுகின்றது.
குழந்தைகள், பெரியவர்கள் தடுமாறி விழ நேரிடுகின்றது. மேலும் வீட்டிற்குள்ளும் சகதியுடனே செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

