/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி *7 பேர் மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி *7 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி *7 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி *7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 08:28 PM
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் தனியார் மருத்துவமனை செவிலியரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சாத்துார் பட்டயன்செட்டி தெருவை சேர்ந்தவர் சூர்யகலா 49. இவரது குடும்பத்துடன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜு , இவரது மகன்கள் தேவன், ஹரிக்குமார், பாபு, கணேஷ், மகள் தேவி, தேவன் மகன் விஜயராஜ் ஆகியோர் நட்பாக பழகி வந்து உள்ளனர்.
2021ல் அவர்கள் சூர்யகலாவிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய சூர்யகலா தனது வீட்டை ஒத்தி வைத்தும் நகைகளை விற்றும் பல கட்டங்களாக ரூ. 90 லட்சம் வழங்கி உள்ளார்.
ஆனால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது ரூ 90 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளனர். இந்த காசோலையும் பணம் இன்றி திரும்பியது.
தன்னை ஏமாற்றிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் ஜே .எம் .2 நீதிமன்றத்தில் சூரியகலா மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சாத்துார் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.