
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு அக்ரஹாரம் நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் 132ம் ஆண்டு கோகுலாஷ்டமி உற்ஸவம் நடந்தது.
தினமும் அஷ்டபதி பஜனையும், மதுரை ஸ்ரீ சக்ர ராஜராஜேஸ்வரி பீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் அவரது சிஷ்யர்களால் ருக்மணி கல்யாணம் பஜனை முறைப்படி நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகி சங்கரநாராயணன், ஹரிஹர சுப்பிரமணியன், ராமசுப்பிரமணியன், ஸ்ரீகுமார், மகளிர் பாகவத கோஷ்டியினர் செய்திருந்தனர்.