sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது

/

தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது

தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது

தாயை கேலி செய்தவரை கொன்ற மகன் கைது


ADDED : ஜூன் 06, 2024 08:50 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 08:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தாயை கேலி செய்தவரை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.

சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் கிழவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. கணவரை இழந்த நிலையில், அய்யப்பன் 20, கார்த்திகேயன், 10, என, இரண்டு மகன்களுடன் கூலித்தொழில் செய்து வருகிறார்.

இவர்களது வீட்டின் அருகே நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட சதீஷ், 48, என்பவர் வாடகை வீட்டில் வசித்தார். இவர், மகாலட்சுமியை நண்பர்களுடன் சேர்ந்து, கேலி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு அய்யப்பன், மது போதையில் இருந்த சதீஷிடம் தட்டிக் கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியதில் அருகே இருந்த கட்டையால் சதீஷை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அய்யப்பனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us