sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பட்டு

/

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பட்டு

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பட்டு

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பட்டு


ADDED : மே 05, 2024 12:26 AM

Google News

ADDED : மே 05, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீரங்கத்தில் நாளை (மே 6) சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்டத்தின் போது பெருமாளுக்கு சாற்றுவதற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் நேற்று ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டன.

நேற்று மாலை 4:15 மணிக்கு கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனந்த சயன பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் கோயில் பிரகாரம் சுற்றி வந்து ஸ்ரீரங்கத்திற்கு காரில் கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் அரங்காவலர்கள் உமாராணி, நளாயினி, செயல் அலுவலர் லட்சுமணன், ராம்கோ நிறுவன இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா, வேத பிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.

இன்று காலை ஸ்ரீரங்கம் கோயிலில் அவை ஒப்படைக்கப்படுகிறது. இதனை நாளை நடக்கும் தேரோட்டத்தின்போது பெருமாள் சாற்றிக் கொள்கிறார்.






      Dinamalar
      Follow us