/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமையாளர், போர்மேன் மீது வழக்கு
/
உரிமையாளர், போர்மேன் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் கல்யாண ராஜனுக்கு சொந்தமாக ரிலையபிள் பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு வருவாய்த் துறையினர், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டாசு தொழிற்சாலைக்கு வெளியே அரசு அனுமதியின்றி ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்து அதில் இரவு நேரத்தில் 40 பேர் சோர்சா வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. கிழக்கு போலீசார் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து, கல்யாண ராஜன், பட்டாசு ஆலை போர் மேன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.