sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு

/

மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு

மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு

மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்பு


ADDED : ஜூன் 29, 2024 05:58 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் சீனி அவரை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.

அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டி, குலசேகரநல்லூர், தமிழ்பாடி உட்பட கிராமங்களில் சீனி அவரைக்காய் விவசாயம்செய்து வருகின்றனர்.

அனைத்து காலங்களிலும் சீனி அவரை வளரக்கூடியது. மிதமான தண்ணீர் இருந்தால் போதுமானது. விதைத்த 40 நாட்களிலேயே காய்கள் வர துவங்கி விடும்.

பூக்கள் வந்து காய்கள் ஆக மாறும் நிலையில் அருப்புக்கோட்டை பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் பூக்கள்உதிர்ந்தது. ஒரு செடியில் கொத்து கொத்தாக வளரும் சீனி அவரைக்காய், மழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்து ஒரு செடியில் ஒரு சில காய்கள் வந்துள்ளது.

நன்கு விளைச்சல் வரக்கூடிய நிலையில் மழை பெய்ததால் சீனிஅவரை விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. சீனி அவரைக்காய் விதைகள் உற்பத்திக்காக இந்த பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. தற்போது விளைச்சல் பாதிப்பால் விதைகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட உள்ளது. விலையும் உயரும் வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us