/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
ADDED : ஆக 26, 2024 05:52 AM
விருதுநகர்:
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தக்குமார், கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தனர். மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,79,432 சிறுவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

