ADDED : மே 04, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் 3 ம் நாள் திருவிழாவில் பிரம்மாண்ட சாமி சிலைகள் ஊர்வலம் நடந்தது.
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன், காமதேனு, கைலாச பர்வத, வேதாள வாகனங்களில் வீதி உலா நடந்தது.
3ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காளீஸ்வரி குழுமம் சார்பில் பிரம்மாண்ட சிவன், அம்மன், உள்ளிட்ட சாமி சிலைகள் ஊர்வலமாக வந்தது.
ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.