ADDED : ஜூலை 09, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூலை 9-
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் உடற்கல்வி உடல்நல கல்வி விளையாட்டு துறை சார்பில் விளையாட்டு அரங்கம் முதல் தொழில்நுட்ப அரங்கம் வரை என்ற தலைப்பில் இணைய வழியில் 8 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். உடற்கல்வித்துறை தலைவர் முருகன் வரவேற்றார். திருச்சி நேஷனல் கல்லுாரி முதல்வர் பிரசன்ன பாலாஜி துவக்கி வைத்தார். கிரீஸ் ஹெலனிக் ஒலிம்பிக் அகாடமி தலைவர் டெமோஸ் தீனஸ் டம்பாகோஸ் உட்பட பலர் பேசினர். அமைப்பு செயலர் அன்பு நிஷா ஜெப சவுந்தர் நன்றி கூறினார். நுாற்றுக்கும் மேற்பட்ட பல்கலை, கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை தலைவர் ஜான்சன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், பால் ஜீவசிங், துணை பேராசிரியர்கள் செய்தனர்.
