ADDED : ஜூன் 15, 2024 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சி.பி.எஸ்., ரத்து, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்துவது,
2009க்கு பின் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகைள வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் முத்தையா பேசினார்.
மகளிர் அணி செயலாளர் சுந்தரபிரதீபா, மாநில துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் சைய்யது முகம்மது ஆரீப் பங்கேற்றனர்.