sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்

/

சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்

சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்

சேதமான தொகுப்பு வீடு, கால்வாயில் தேங்கும் கழிவுநீர் சிரமத்தில் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள்


ADDED : ஜூலை 07, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: நீர்வரத்து கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகள், மேல்நிலைத் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிவு உண்டாவதால் விபத்து அச்சம் இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் காரியாபட்டி அழகிய நல்லூர் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காரியாபட்டி மேல, கீழ அழகியநல்லூரில் போதிய வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வரத்து கால்வாயில் தேங்குகிறது. அதில் கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அருகில் குடியிருக்க சிரமம் ஏற்படுகிறது. புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது.

மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிவு உண்டாவதால் விபத்து அச்சத்தில் மக்கள் உள்ளனர். இங்குள்ள தொகுப்பு வீடுகள் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பு இல்லாததால் குடியிருக்க முடியவில்லை. வீடுகள் சேதமானதையடுத்து பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் குடியேறி வருகின்றனர். பெரும்பாலான வீதிகளில் பேவர் பிளாக் கிடையாது.

வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்


முனியசாமி, விவசாயி: காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் சிறு ஓடைகள் வழியாக வரத்து கால்வாயில் பாய்ந்து கண்மாய்க்கு செல்லும். தற்போது கழிவுநீர் தேங்கி அசுத்தமாகி உள்ளது. குடிநீர் ஆதாரமாக இருக்கும் கண்மாய் பகுதிகளில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. வரத்து கால்வாயை தூர்வாரி கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையில் ரோடு குறுகலாக இருப்பதால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல வழி இன்றி சிரமம் ஏற்படுகிறது. புதிய வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.

தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்


வில்லியம்ஸ், விவசாயி: 35 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பு இல்லாததால் வீடுகள் சேதம் அடைந்தன. குடியிருக்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறி வேறு கிராமங்களில் குடியேறி வருகின்றனர். வீடுகளை பராமரிக்க வேண்டும். இருக்கிற மக்களுக்கு வசிக்க தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அச்சம்


ரத்தினம், விவசாயி: மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. சரிவர கட்டாததால் சேதம் அடைந்து நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. சேதமடைந்த மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். வாறுகால் வசதி செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us