sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை

/

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை

திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை


ADDED : ஜூன் 23, 2024 03:15 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சேதமடைந்துள்ள அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகம், சிவகாசி மாநகராட்சியில் இணைந்த பின்னர் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. இங்கு வரி வசூல் ,பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. மேலும் இ சேவை மையமும் இயங்கி வருகின்றது. இதனால் தினமும் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு தேவைகளுக்கு மண்டல அலுவலகத்திற்கு வருகின்றனர். ஆனால் இங்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. ஒவ்வொரு தேவைக்கும் வருகின்ற மக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர். மேலும் மண்டல அலுவலகம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

கட்டடத்தையும் கழிப்பறையையும் மராமத்து செய்வதற்காக 8 மாதங்களுக்கு முன்பு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்தப் பணியும் துவங்கவில்லை. எனவே உடனடியாக மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us