ADDED : மார் 15, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி நெடுகநேந்தலை சேர்ந்தவர் செந்தில் 42, கரி வியாபாரி. இவர் ஆக. 28 ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது,
காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளல் தாக்கி தப்பிச் சென்றனர். இவ் வழக்கில் அவிநாசியை சேர்ந்த குமார் மனைவி விஜயலட்சுமி 39, யின் தூண்டுதலின் பேரில் பல்லடத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் 36, ஜெயசீலன் 50 கத்தி அரிவாளால் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.