sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனநிலை பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மூவர் கைது

/

மனநிலை பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மூவர் கைது

மனநிலை பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மூவர் கைது

மனநிலை பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மூவர் கைது


ADDED : மே 09, 2024 02:34 AM

Google News

ADDED : மே 09, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மனநிலை பாதித்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முருகன் 55, முன்னாள் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ் 47, ஜவகர் 45, ஆகியோரை அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். தேவராஜை 74, தேடி வருகின்றனர்.

காரியாபட்டி அருகே கிராமத்தை சேர்ந்த நபருக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள். 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு முன் வெளியில் சென்றவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, சிறுவனை தென்காசியிலும், ஒரு சிறுமியை சிவகாசியில் உள்ள காப்பகத்திலும் சேர்த்து விட்டனர்.

குழந்தகைளின் தந்தையும் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது அண்ணன் மகள் மன நலம் பாதிக்கப்பட்ட 3 பேரும் இருந்தனர். தென்காசி காப்பகத்தில் படித்து வந்த 15 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஏப்.18ல் வீட்டிற்கு உறவினர் அழைத்து வந்தார். மே 4 ல் சிறுமியின் உடம்பில் தூசி படிந்து, உடைகள் கசங்கி இருந்தன.

விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த முருகன் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்றும், தொடர்ந்து முன்னாள் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, முருகன், பாண்டியராஜ், ஜவகரை, கைது செய்தனர். தேவராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us