/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED : மார் 25, 2024 06:33 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்றிரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை திருப்பதி கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு பட்டு , மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.
இக்கோயிலில் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஒன்பதாம் திருநாளான இன்று (மார்ச் 25) காலை 7:00 மணிக்கு செப்புத்தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.
அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து நேற்று மாலை 4:30 மணிக்கு பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டுவரப்பட்டது.
இதனைக் கோயில் பட்டர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். பின்னர் மாட வீதிகள் சுற்றி வந்து ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று இரவு நடக்கும் கன்னிகாதானத்தின்போது இப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.

