/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : மார் 25, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் தென்காசி லோக்சபா தேர்தலில் பணியாற்றும் 1330 அலுவலர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களை கையாளும் விதம், லோக்சபா பொது தேர்வில் வாக்காளர்களை கையாளும் விதம், ஓட்டுப்பதிவு எந்திரங்களை பராமரிப்பது ஓட்டுபதிவினை கண்காணிப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

