sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரு அரசு பஸ்கள் ஜப்தி

/

இரு அரசு பஸ்கள் ஜப்தி

இரு அரசு பஸ்கள் ஜப்தி

இரு அரசு பஸ்கள் ஜப்தி


ADDED : செப் 11, 2024 01:44 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:-விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி--அருப்புக்கோட்டை ரோட்டில்விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.39.20 லட்சம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றஊழியர்கள் இரண்டு அரசு பஸ்களை ஜப்திசெய்தனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சுந்தரகுண்டைச் சேர்ந்தவர்பூவேஷ்வரன் 28 .

இவர் டூவீலரில் 2018 ஆக., 9ல் கல்குறிச்சி -- அருப்புக்கோட்டை ரோட்டில் சென்ற போது அரசு பஸ் மோதி பலியானார்.

அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.27 லட்சத்து35 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்கவும்,

இத்தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.39.20 லட்சத்தை முன்தேதியிட்டு கணக்கிட்டு பூவேஷ்வரன் குடும்பத்திற்கு வழங்க 2023 ஆக., 23ல் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி.ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்காததால்நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படிவிருதுநகர் அரசுபோக்குவரத்து கழகத்திற்கு சொந்தமானஇரண்டு அரசுபஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.






      Dinamalar
      Follow us