sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,யில் நான்கு வழிச்சாலை பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

/

ஸ்ரீவி.,யில் நான்கு வழிச்சாலை பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

ஸ்ரீவி.,யில் நான்கு வழிச்சாலை பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருவர் பலி

ஸ்ரீவி.,யில் நான்கு வழிச்சாலை பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருவர் பலி


ADDED : ஆக 20, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தேனி மாவட்டம் போடி பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 20, ஜெயபிரகாஷ் 22 பலியாகினர்.

பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் ஜெயபிரகாஷ் 22, கல்லுாரி மாணவர். அதை ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி 20, இருவரும் உறவினர்கள்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு இருவரும் தங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு விழாவிற்கு ஒரு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 5:00 மணியளவில் திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மூவரை வென்றான் அர்ஜுனா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆற்றுப் பாலத்தின் பள்ளத்தின் மறு கரையில் மோதி, ஒருவர் தரையிலும், மற்றொருவர் டூவீலருடன் தண்ணீருக்குள் மூழ்கியும் உயிரிழந்து கிடந்தனர்.

நேற்று காலை 7:00 மணிக்கு பார்த்த பாலம் கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் விபத்து

தற்போது திருமங்கலத்தில் இருந்து கல்லுப்பட்டி, அழகாபுரி, நத்தம் பட்டி, கிருஷ்ணன்கோவில் வரை நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பல இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லை. வேகமாக வரும் டூவீலர்கள், கார்கள் விபத்திற்குள்ளாகின்றன. எனவே தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கவும், அபாய வளைவு, பாலப் பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்








      Dinamalar
      Follow us