sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

/

செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை


ADDED : மார் 04, 2025 04:00 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பெட்ரோல் பங்க் செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலியான வழக்கில் உரிமையாளர், மேனேஜர் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்துார் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கேல் அமல்தாஸ் 48. சாத்துார் அருகே நள்ளியிலுள்ள அவரின் பெட்ரோல் பங்க் செப்டிக் டேங்கை 2014 ஜுன் 19 ல் கோவில்பட்டி ஆவல்நத்தத்தைச் சேர்ந்த ராஜ் 22, மாடசாமி 28, ஆகியோர் சுத்தம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறங்கிய போது விஷவாயுத்தாக்கி பலியாகினர்.

இவ்வழக்கில் மைக்கேல் அமல்தாஸ், மேனேஜர் கோவில்பட்டி இலுப்பையூரணி மார்ட்டின் ஜார்ஜ் 45, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தாலுகா போலீசார் விசாரித்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி முத்து மகாராஜா குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் முருகன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us