sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது

/

மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது

மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது

மொய் பணத்தை திருடிய இரு சகோதரிகள் கைது


ADDED : ஜூலை 10, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார், கொத்தங்குளத்தைச் சேர்ந்த சமுத்திரகனி என்பவர் இல்ல திருமண விழா, ஜூலை 7ல், வன்னியம்பட்டி விலக்கில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. திருமண வீட்டார் மொய் பணம் வசூலித்து கொண்டிருந்த நிலையில், டிப் டாப்பாக வந்த இரு பெண்கள், மொய் பணம் வசூலித்தவரிடம், 500 ரூபாய்க்கு போட்டி போட்டு சில்லரை கேட்டனர்.

மொய் வசூல் செய்தவர் குழப்பமடைந்த நிலையில், அவரது கவனத்தை திசை திருப்பி, 1.71 லட்ச ரூபாய் இருந்த பணப்பையை இருவரும் திருடி சென்றனர். அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் உடனடியாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதலில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா அயன் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி, 54, அவரது தங்கை அமாவாசை மனைவி பாண்டியம்மாள், 42, ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரிந்தது.

உசிலம்பட்டியில் இருந்து ஒரு வாடகை காரில் திருமண மண்டபத்திற்கு வந்து, மொய் பணத்தை திருடிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த, 1.71 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us