/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
/
டூவீலர்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
ADDED : செப் 03, 2024 02:43 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே வளையப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் வளையப்பட்டியைச் சேர்ந்த அழகு முருகன் 25, கூத்திப்பாறையைச் சேர்ந்த மாரீஸ்வரன் 29, சம்பவயிடத்திலேயே பலியாகினர்.
வளையப்பட்டியைச் சேர்ந்தவர் அழகு முருகன். இவர் அருப்புக்கோட்டையில் மருந்து கடையில் பணிபுரிகிறார்.
இவர் டூவீலரில் (ஹெல்ெமட் அணியவில்லை) நேற்று முன்தினம் இரவு பணிமுடித்து சொந்த ஊர் நோக்கி சென்றார்.
கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் 29. இவர் சிங்கப்பூரில் பணி செய்து விட்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
இவரின் நண்பர் அரச்சனாபுரத்தைச் சேர்ந்த சிவா 19. இருவரும் டூவீலரில் (ஹெல்ெமட் அணியவில்லை) நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு வளையப்பட்டி வளைவு அருகே சென்றனர்.
இந்த இரு டூவீலர்களும் வளையப்பட்டி வளைவு அருகே நேருக்கு நேர் மோதியதில் அழகு முருகன், மாரீஸ்வரன் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.
காயமடைந்த சிவா விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.