/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயம் காட்டும் வெம்பக்கோட்டை: அமைச்சர் பெருமிதம்
/
தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயம் காட்டும் வெம்பக்கோட்டை: அமைச்சர் பெருமிதம்
தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயம் காட்டும் வெம்பக்கோட்டை: அமைச்சர் பெருமிதம்
தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயம் காட்டும் வெம்பக்கோட்டை: அமைச்சர் பெருமிதம்
UPDATED : மார் 08, 2025 07:12 AM
ADDED : மார் 08, 2025 02:14 AM

சிவகாசி:''விருதுநகர்மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் தமிழரின் வரலாற்றை தாங்கிப்பிடிப்பதாக உள்ளது. வாழ்வியல் தடயம் காட்டுகிறது ''என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 22 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 4000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி மணி, சுடுமண் மணி, முழுமையான காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாவது:
நம் தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டை திகழ்ந்து வருகிறது.
இங்கு அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளது. கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மணிகளும் பல கிடைக்கப் பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன் வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.