ADDED : ஆக 08, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே சேதுராமலிங்காபுரம் சேர்ந்தவர் மாரீஸ்வரன் 38.
இவருக்கு அதே பகுதியில் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற எஸ்.ஆர்.எம்., பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் சல்வார் பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் 32, நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள ஆற்றின் ஓரத்தில் பட்டாசு கழிவுகளை கொளுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவு பட்டாசு வெடித்ததில் மாரீஸ்வரன் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.