ADDED : மே 10, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் நாகஜோதி தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். பொது மக்களுக்கு மோர், சர்பத், குளிர்பானங்கள் வெள்ளரிக்காய், தர்பூசணி உட்பட பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.